இது நம்ம ஆளு படத்துக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகி றார் சிம்பு. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பெண்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராத வன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகி றார் சிம்பு. இதில் 3 வேடம் ஏற்றிருக்கிறார். ஒரு சிம்புக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். மற்றொரு ஜோடிக்கான தேடுதல் வேட்டை நடந்தது. பாலிவுட் ஹீரோயின்கள் 2 பேர் பரிசீலிக் கப் பட்டனர். தற்போது தமன்னா நடிக்க முடிவாகி இருக்கிறார்.
இது பற்றி இயக்குனர் கூறும் போது, ‘முதன் முறையாக சிம்புக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்’ என்றார். படத்தில் சிம்புக்கு 3 வேடங்களில் 2 வேடங்களுக்கு ஜோடி முடிவான நிலையில் 3வது கதாபாத்திரத்துக்கு ஜோடி இருக்குமா? இல்லையா? என் பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர்.