நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு இந்தி என்று மூன்று மொழி படங்களில் நடித்து விட்டார். இப்போது ஒரு கன்னடப்படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்திருக்கிறது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்து பெரும் வெற்றியை எட்டிய ‘துக்குடு’ படம் தான் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் நாயகி கேரக்டரில் நடிக்கத்தான் திரிஷாவுக்கு அழைப்பு. இந்த படத்தில் நடித்து விட்டால் நான்கு மொழியில் நடித்த நடிகை என்ற பெயரும் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் இந்த படத்தில் நடிக்க ரூ.20 லட்சம் சம்பளத்துக்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாருடன் நடிக்கிறார். நாளை மறுநாள் பெல்லாரியில் நடக்கும் ஜூட்டிங்கில் திரிஷா கலந்து கொள்கிறார்
நயன்தாரா, திரிஷா, தமிழ், தெலுங்கு பட உலகில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் இருந்தனர். சிம்பு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவுக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. திரிஷா சம்பளமும் ரூ.1 கோடியை தாண்டி இருந்தது. ஆனால் சமீப காலமாக அவருக்கு பெரிதாக படங் கள் இல்லை. அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, டாப்சி, காஜல்அகர்வால், அமலா பால் உள்ளிட்டோர் திரிஷா மார்க்கெட்டை சரித்து விட்டனர்.
இந்த படம் மூலம் கன்னட மார்க்கெட்டை பிடிக்கலாம், என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த சம்பளத்துக்கு அவர் ஒப்புக் கொண்டதாக கூறப் படுகிறது. திரிஷா திரையுலகுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை கன்னட படங்களில் நடிக்க வில்லை. முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கிறார்.
0 Comments:
Post a Comment